Thursday, May 17, 2012

புதிய வடிவில் இந்தியாவின் வியூகம்?

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய குழு இவர்களின் நோக்கம் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய என அமைந்தது.ஆனால் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு வடகிழக்கில் இவர்களின் பயணம் அசுரவேகத்தில் நடைபெற்றது.
பின்பு இலங்கையின் ஊடகங்களில் இலங்கை அரசிற்கு சாதகமாகவும்,இந்திய ஊடகங்களில் இந்திய அரசிற்கு சாதகமாகவும் பரப்புரைகள் செய்யப்பட்டது.
மாறாக இவர்கள் இலங்கைபுரப்பட முன்பு தமிழ் மக்களுக்கு இவர்களின் பயணம் பயன்தராது என வைகோ போன்றோர் கூறினார்.அதுவே சரியானது.நடந்தது என்ன?கடந்த மாதம் 28/04/2012 ல் இந்திய அரசால் செய்தி வெளியிடப்பட்டது "டில்லியை தலைமை நிலையமாக கொண்ட வடகிழக்கு கண்காணிப்பு நிலையம் அமையவிருக்கின்றதேன்பதே அது.தூதுக்குழிவின் பயணம் திட்டமிட்டபடி வெற்றி.இவற்றை அறியாத தமிழ் கூட்டமைப்பும் பங்கு பற்றியமை கேவலமான விடயம்.

Thursday, August 25, 2011

கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம்! வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்


கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம், உடனடியாக இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்துங்கள், சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை என இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்தியதாக வடமராட்சி கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளார். 
மேற்கண்டவாறு தினக்குரல்; பத்திரிகை நிறுவனத்திற்க்கு நேரடியாகத் தொடர்பு கொண்ட மக்கள் சிலர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில். நேற்று(புதன்கிழமை) காலை 8மணிதொடக்கம் வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வீடுகளிற்க்குள் நுழைந்த படையினர் கிறீஸ் மனிதன் வந்தால் அது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்குத் தெரியப்படுத்துங்கள்,
நீங்களாக அவர்களைப் பிடித்து அடிக்கவேண்டாம். அப்படி எதுவும் நடந்தால் உங்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தினர்.
எமது பகுதியில் நாளுக்கு நாள் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவித்தல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.
காலை தொடக்கம் ஒவ்வொரு வீடுகளிற்க்கும் சுமார் 5வரையான இராணுவத்தினர் வந்து மேற்படி அறிவித்தலைக் கொடுத்துள்ளனர். இராணுவத்தினர் அறிவித்தல் கொடுத்தபோது எங்களுடைய பாதுகாப்புக்காக நாங்கள் கிறீஸ் மனிதர்களைத் திருப்பித்தாக்கவேண்டும்தானே என சிலர் வினவியதற்க்கு அவ்வாறு சம்பவம் நடந்தால் உடனடியாக துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்படும் என இராணுவத்தினர் பதிலளித்தனர்.
வடமராட்சி கிழக்கில் தாளையடிப்பிரதேசத்தில் மட்டுமே பொலிஸார் உள்ளனர். எனினும் பொலிஸாரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே உள்ளது.
இதனால் இராணுவத்தினரின் கட்டுப்பாடு அதிகம் காணப்படுகின்றது. இது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தைத் தோற்று வித்திருக்கின்றது.
இந்நிலையில் உடுத்துறைப் பிரதேசத்தில் நேற்று மாலை 5.45மணியளவில் பிக்கப் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் பூவரசம் மரத்திலிருந்து பொல்லுக்கள் உருவாக்கக்கூடிய தடிகளை வெட்டிச் சென்றதை பிரதேச இளைஞர்கள் சிலர் நேரடியாக கண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள மக்கள் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவ வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

Tuesday, August 23, 2011

தரைமட்டமாக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு!

வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை நேற்று இரவோடு இரவாகப் படையினர் முற்றாக இடித்து அழித்துள்ளனர்.

நேற்றிரவு 10.15 மணியளவில் பிரபாகரனின் வீட்டுக்கு இரண்டு டிப்பர்கள், ஒரு பெக்கோ இயந்திரம் சகிதம் வந்த படையினர் நள்ளிரவு வரை இடிபாடுகளை அகற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வன்னி யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அவ்வீட்டினை பலதடவைகள் படையினரும் இனவாதக்காரர்களும் கட்டம்கட்டமாக சிதைத்து வந்திருக்கும் நிலையில் தெற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து நேற்றிரவு மேற்படி வீடானது,  இராணுவத்தினரால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

வடக்கிலும் கிழக்கிலும் புலிகள் இயக்கப் போராளிகளது மாவீரர் துயிலுமில்லங்களையும் நினைவுத்தூபிகளையும் கட்டம் கட்டமாக அழித்துள்ள இலங்கை அரசு தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனது வீட்டையும் முற்றாக அழித்துள்ளனர்.

முல்லைத்தீவில் பிரபாகரன் பயன்படுத்தினார் என்று கூறப்படும் பங்கரை சிங்களச் சுற்றுலாப் பயணிகளுக்கான மையமாக இராணுவம் மாற்றி உள்ள மையும் குறிப்பிடத்தக்கது.



Saturday, August 20, 2011

முல்லைத்தீவில் இறுதிப்போர் நடந்த இடங்களில் மீள்குடியமர்வுக்கு அனுமதியில்லை (வீடியோ இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் உள்ளிட்ட சில கிராம அதிகாரி பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சிறிலங்கா அரசின் இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராம அதிகாரி பிரிவுகளில் மீள்குடியமர்வுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக முல்லைத்தீவின் சில பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை கோம்பாவில் என்ற இடத்தில் மீளக்குடியேற்றவுள்ளதாக முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி கூறியிருந்தார்.

கோம்பாவில் பகுதியில் காடுகளை அழித்து தற்காலிக குடியிருப்புகளை அமைக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. அந்த இடத்தை ஐ.நாவின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினய் நந்தி அண்மையில் சென்று பார்வையிட்டிருந்தார்.

ஆனால் இடம்பெயர்ந்த மக்களை வேறு இடங்களில் குடியேற்ற சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகள் , போர்க்குற்றங்கள் குறித்த சாட்சியங்களை முற்றாக அழிப்பதற்கே சிறிலங்கா அரசு அங்கு மீள்குடியமர்வுக்கு அனுமதி மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலத்துக்கடியில் புதைந்த போயுள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியே வந்து விடுமோ என்ற அச்சத்தினாலேயே சிறிலங்கா அரசு இவ்வாறு செயற்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


Wednesday, August 17, 2011

யாழ். குடாநாட்டில் கிறிஸ் மனிதன் தொடர்பான பீதியை கிளப்பிவிட இராணுவத்தினர் முயற்சி


குடாநாட்டில் கிறிஸ் மனிதன் தொடர்பான பீதியை கிளப்பிவிட இராணுவத்தினர் முயற்சிப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள மக்கள் நேற்றைய தினம் யாழ்.தென்மராட்சிப் பிரதேசத்தில் கிறிஸ் மனிதன் தொடர்பாக இராணுவத்தினர் ஒலிபரப்புச் செய்தமை தொடர்பாகவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பிரதேசத்தில் இனம்தெரியாத நபர்கள் சிலர் அங்கு மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்களிடம் சென்று அவர்கள் பற்றிய விபரங்களை கோரியுள்ளனர். இந்தத்தகவல் பரபரப்பாக பரவியதையடுத்து இராணுவத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடிய இராணுவத்தினர் கிறிஸ் மனிதன் தொடர்பாக ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்ததுடன் மக்களைப் பாதுகாப்பாக தங்குமாறும் கேட்டுள்ளனர்.
இதனையடுத்தே மீளக்குடியமர்ந்திருந்த முஸ்லிம் மக்கள் இன்னமும் பாதுகாப்பான தங்குமிடங்களை அமைத்துக் கொள்ளாத சூழலில் பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இந்த விடயத்ததை பெரிதாக்கி கிறிஸ் மனிதன் தொடர்பான பீதியை குடாநாட்டில் பரப்பி விட இராணுவத்தினர் முயன்றிருக்கின்றனர். என குற்றம் சாட்டியுள்ள மக்கள் விரைவில் கிறிஸ் மனிதன் குடாநாட்டில் உலவுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tuesday, August 16, 2011

இனி என்ன செய்யப் போகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு?

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஈழத் தமிழ் மக்களின் பேராதரவான வாக்குகளால் தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் மாபெரும் வெற்றியைப் பெற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
சிறிலங்கா அரசினால் முழு வீச்சாக மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள், கவர்ச்சிகள், சலுகைகள் எல்லாவற்றையும் தாண்டி தமிழ் மக்கள் தங்களுக்குத் தேவை தமிழர் தாயகம், தமிழர் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பதனை மீண்டும் ஒரு முறை உலகிற்கு அழுத்தமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
இந்த வெற்றியானது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் அதையும் விட தமிழ்த் தேசியத்துக்கு கிடைத்த சிறப்பான வெற்றியாகப் பார்க்கப்பட வேண்டும். தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கில் 17 உள்ளூராட்சி சபைகளையும், கிழக்கில் 3 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றியதன் மூலம் சிங்கள வல்லாதிக்கம் அல்லது அவர்களோடு இணைந்து இயங்குபவர்களுக்கு சரியான அடியாகவும் அமைந்திருந்தது.
ஆனால் தமிழ் மக்கள் அளித்த வெற்றியின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது தமிழ் மக்களுக்கு தங்களது சொந்த குடும்ப நலன்கள், சுயநலங்கள் எல்லாவற்றையும் துறந்து நேர்மையாக உழைக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக புரிந்து கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாக குதறப்பட்ட சம்பவத்தினை எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் மறக்காது எம் தமிழினம்.
ஒரு இனத்துக்கு தேசிய அடையாளம் எவ்வளவு முக்கியம் என்பதனை தமிழ் மக்கள் வெளிப்படையாகவே சொல்லி விட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடுகள் எப்படியாக கட்டிக் காக்கப்பட்டது என்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு எந்தளவுக்கு தமிழர் தாயகப் பிரதேசம் பல்வேறு வழிகளிலும் சிங்களவர்களினால் சிதைக்கப் பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இப்படியாக ஒட்டு மொத்த தமிழினத்தின் கோபம் தான் சிங்கள அரசும் அதன் அருவருடிகளும் தமிழ் மண்ணில் தூக்கிஎறியப்பட்டதன் காரணம்.
போர் முடிவடைந்து தோற்கடிக்கப்பட்ட ஒரு தேசத்தில் எப்படியான அடக்கு முறைகளும் சீரழிவுகளும் சுரண்டல்களும் இடம்பெறுமோ அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் இன்றைய யாழ்ப்பாணம். தமிழ் இளைஞர்களின் போராட்ட குணத்தை, தமிழ் உணர்வுகளை மழுங்கடித்து அதனை முற்றிலும் இல்லாமல் செய்து விடும் தெளிவான நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது சிங்கள அரசு.
இதற்காக தனது அருவருடிகளைப் பயன்படுத்தி இளைய சமுதாயத்தின் உணர்வுகளை அப்படியே அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை சச்சிதமாக நிறைவேற்றி வருகின்றது. விலை போன தமிழ்க் கட்சிகளின் கைக்கூலிகள் மூலம் ஆபாசப் படம் காட்டல், விபச்சாரத்தை ஊக்குவித்தல், தாராளமாக போதை மருந்துகளை விநியோகித்தல் போன்ற இழிவான நடவடிக்கைகளின் மூலம் இளைஞர்களின் மனதை திட்டமிட்டு திசை திருப்பி வருகின்றது சிங்கள அரசு.
இதன் இன்னொரு பக்கமாக தமிழ் மக்களின் பாரம்பரியமான கலாச்சார சின்னங்களை அழித்தல் அல்லது உருமாற்றல், தமிழர் தாயகப் பகுதிகளில் பொருளாதார ரீதியாகச் சுரண்டல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவுதல் போன்ற செயற்பாடுகளையும் சச்சிதமாக நிறைவேற்றி வருகின்றது.
இப்படியாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் தலை விரித்தாடும் சிங்களத்துக்கு தமிழ் மக்கள் கொடுத்த பதிலடி தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள். இன்னொரு முக்கியமான விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பு சிங்கள அரசால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் தங்களுக்கு உள்ள ஒரே தெரிவாக கூட்டமைப்பை கருதுகிறார்கள். இதனால் பலத்த ஆதரவை இன்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய நிலையில் முக்கியமான ஒரு இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறது. இதனால் அவர்களுக்கான பொறுப்புக்களும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. இதன் காரணமாக கூட்டமைப்பு இனியாவது தனக்கான பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழர் தாயகப் பிரதேசங்களில் அவர்களை ஒழுங்கு படுத்தும் கட்டமைப்புக்கள் சீர்குலைந்து போயுள்ளன. அவற்றை சீரமைக்க கூட்டமைப்பு முழுமையாகப் பாடுபட வேண்டும்.
முக்கியமாக அறிவுஜீவிகள், புலமைசார் திறனாய்வாளர்கள், கல்வியலாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரை உள்வாங்கி தமிழ் மக்களுக்கான அரசியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை, கலைக் கொள்கை போன்ற கட்டமைப்புக்களை மீள உருவாக்க வேண்டும். புலம்பெயர் சமூகத்தை தாயகத்துடன் இணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும்.
புலத்தில் உள்ள தமிழ் மக்களின் உதவியுடன் இன்னமும் வன்னிப் பெருநிலப்பரப்பில் சின்னம் சிறு கொட்டகைகளுக்குள் அடைந்து கிடந்தது பல்வேறு உடலியல் உபாதைகள், உளவியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். தகரக் கூடாரங்களில் வாழும் மக்களுக்கு பருவ மழைக் காலத்துக்கு முன்னர் ஒழுங்கான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அங்குள்ள மக்கள் முன்னர் வாழ்ந்ததைப் போன்று கௌரவமாக வாழ அவர்கள் வாழும் பிரதேசங்களில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அங்கு வசிக்கும் சிறார்களின் இழந்து போன கல்வியை மீட்டு எடுக்க யாழ் பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக யாழ் பல்கலைக் கழக சமூகம் மற்றும் யாழில் கல்வித்தரத்தில் சிறப்பான பாடசாலைகளில் பயிலும் மாணவர்களைக் கொண்டு வன்னிப் பகுதியில் வறுமையினால் பாடசாலை செல்ல வழியின்றி தவிக்கும் மீள்குடியேறிய மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியறிவுள்ள சமூகமொன்றைக் கட்டமைக்க கூட்டமைப்பு இப்படியான செயற்பாடுகளை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும்.
அடுத்து மிகப் பிரதானமாக தமிழ் கூட்டமைப்பில் உள்ள வயதானவர்கள் பெருந்தன்மையோடு விலகி துடிப்புள்ள இளைஞர்கள் உள் வர வழி வகை செய்ய வேண்டும். ஏனெனில் இளையவர்கள் தான் முழுவீச்சுடன் கூடுதலான நேரங்களில் மக்களுடன் களத்தில் நின்று பணி புரிவார்கள். கூட்டமைப்பின் பழம் பெரும் தலைவர்கள் ஆலோசகர்கள் என்ற நிலையை வகிக்கலாம்.
கூடுதலான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியதன் மூலம் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டால் வடக்கு கிழக்கில் அழிந்து போன உட்கட்டமைப்பு வசதிகளை சபைகளின் மூலம் திறம்பட மேம்படுத்தலாம். இவற்றை விரைந்து மேற்கொள்ள கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்று முக்கியமானது தான். ஆனால் அதனையும் தாண்டி இன்றைய நிலையில் எமது மக்கள் அடிப்படைக் கல்வி, பொருளாதாரத் தேவைகள் மற்றும் உயிர் வாழத் தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை செய்து கொடுக்கும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
மஹிந்தருடன் இணக்க அரசியல் நடத்தி சில்லறைத் தீர்வுகளைப் பெறும் முயற்சியில் வெட்டியாகப் பொழுதைக் கழிக்காமல் மேற்சொன்ன தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும். மீண்டும் ஒரு தரம் தமிழ் மக்கள் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் அவர்களை ஏமாற்றாமல் செயற்படுமா கூட்டமைப்பு? இதற்கு இனிவரும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Sunday, August 14, 2011

என்றென்றும் வாழ்கவே!!!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்...த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!

இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.