குடாநாட்டில் கிறிஸ் மனிதன் தொடர்பான பீதியை கிளப்பிவிட இராணுவத்தினர் முயற்சிப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள மக்கள் நேற்றைய தினம் யாழ்.தென்மராட்சிப் பிரதேசத்தில் கிறிஸ் மனிதன் தொடர்பாக இராணுவத்தினர் ஒலிபரப்புச் செய்தமை தொடர்பாகவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பிரதேசத்தில் இனம்தெரியாத நபர்கள் சிலர் அங்கு மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்களிடம் சென்று அவர்கள் பற்றிய விபரங்களை கோரியுள்ளனர். இந்தத்தகவல் பரபரப்பாக பரவியதையடுத்து இராணுவத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடிய இராணுவத்தினர் கிறிஸ் மனிதன் தொடர்பாக ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்ததுடன் மக்களைப் பாதுகாப்பாக தங்குமாறும் கேட்டுள்ளனர்.
இதனையடுத்தே மீளக்குடியமர்ந்திருந்த முஸ்லிம் மக்கள் இன்னமும் பாதுகாப்பான தங்குமிடங்களை அமைத்துக் கொள்ளாத சூழலில் பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இந்த விடயத்ததை பெரிதாக்கி கிறிஸ் மனிதன் தொடர்பான பீதியை குடாநாட்டில் பரப்பி விட இராணுவத்தினர் முயன்றிருக்கின்றனர். என குற்றம் சாட்டியுள்ள மக்கள் விரைவில் கிறிஸ் மனிதன் குடாநாட்டில் உலவுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment