Sunday, July 31, 2011

தடுமாறும் சிவாஜிலிங்கமும்,தடுமாற போகும் தமிழ்தேசிய கூட்டமைப்பும்?

தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று வடக்கு கிழக்கில் தமிழர் இருப்பை உறுதி செய்ததுஇது யாவரும் அறிந்ததே.தேர்தல் காலப்பகுதியில் அதாவது தேர்தலுக்கு முன்பு சில மாற்றங்கள் நடந்தன அதாவது முன்பு பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட "தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பு" என்ற கட்சி கலைக்கப்பட்டு அவருடன் இருந்த எம்பி சிறிகாந்தாவும் அவர்கள் முன்பு அங்கத்துவம் வகித்த ரெலோவுடன் இணைந்துகொண்டனர்.இதன் பின்பு வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் தேசிய மாநாட்டில் உரைநிகழ்த்திய சிவாஜிலிங்கம் சொன்னார் "நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே கொள்கையுடன் சேர்ந்து நமக்கான அரசியல் உரிமைகளை பெறவேண்டும்",இதையும் நாம் மறந்துவிடவில்லை.தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு "தேசியம்,தாயகம் என்பவற்றுடன் முள்ளிவாய்க்கால் அவலங்கள்,மீள்குடியேற்றம்,முன்னாள் போராளிகளின் விடுதலைக்கு உதவுதல்"என்ற கோரிக்கைகளுடன் களத்தில் இறங்கினார்கள் மக்களோ அமோக ஆதரவுடன் வெற்றி பெற செய்தார்கள்,ஆனால் இன்றோ நடப்பது என்ன?சிவாஜிலிங்கம் இப்போ தடுமாறுகின்றார்,இதோ அவரின் கோரிக்கைகள் 
 கடந்த 28.07.2011 திகதியிட்டு வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தல் - 2011 எனத் தலைப்பிட்டு, வல்வெட்டித்துறை நலன்விரும்பிகள் என சிவாஜிலிங்கத்தின் தலைமையில் 11 பேர் ஒப்பமிட்டு, வல்வெட்டித்துறையில் இருந்து தொலைநகல் மூலம் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை.சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு :
1. முன்னுரிமை வாக்கின் அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு மட்டுமே அன்றி தலைவர் உபதலைவர் தெரிவுக்கு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
2. நியமனப்பத்திரம் தயாரித்த வேளை 26.01.2011 ல் திரு சுமந்திரன் பா.உ முன்னிலையில் தங்கள் திரு.அனந்தராஜாவின் கேள்விக்கு பதிலளிக்கையில் முன்னுரிமை வாக்குகளை மட்டும் கருத்தில் கொள்ளாது வேறு பல அம்சங்களும் சேர்த்தே பரிசீலிக்கப்படும் எனப் பதிலளித்தமையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
3. இந் நிலையில் திரு.ந. அனந்தராஜ் உள்ளிட்ட எமது உறுப்பினர்கள் மத்தியில் சுழற்சி முறையில் தலைவர், உப தலைவர் பதவிகள் பகிர்ந்து வகிக்கும் திட்டத்தினை அமுல்படுத்த ஒரு மனதாக தீர்மானித்துள்ளோம்.
4.இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களும் போட்டியிட்ட வேட்பாளர்களும் மற்றும் வல்வெட்டித்துறை நலன் விரும்பிகளும் ஒருமித்த கருத்துடன் சிவாஜிலிங்கம் முதல் ஒரு ஆண்டும் அனந்தராஜ் அடுத்த இரு ஆண்டுகளும் குலநாயகம் ஒரு ஆண்டும் தலைவர் பதவியை வகிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
5. உப தலைவார் பதவி சதீஸ் இராமச்சந்திரன் (தெரிவாகதவர்)  ஜெயராஜ், மயூரன், ஜெயதீஸ் ஆகியோருக்கிடையில் 4 ஆண்டுகளும் பகிர்ந்து அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
6. 4ம்,5ம் பந்திகளில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்த ஏதுவாகவும் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுப்பதற்கு கால அவகாசத்தை கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் தற்காலிக ஏற்பாடாக தலைவராக க.ஜெயராஜா வையும் உப தலைவராக க.சதீஸ் ஐம் நியமித்து தேர்தல் ஆனையாளருக்கு அறிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
7. 6ம் பந்தியில் குறிப்பிட்டுள்ள குறைந்த பட்ச கோரிக்கைகளையும் ஏற்கபடாது விடத்தில் எமது கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் நகரசபை நிர்வாகத்துடன் ஒத்துழைக்காது செயற்படுவதன் மூலம் நகரசபை செயற்பாடுகள் முடங்கும் நிலை ஏற்படும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம்.
என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அவலங்களை முன்னிறுத்தி வாக்குகேட்ட சிவாஜிலிங்கம் தற்பொழுது பதவிக்காக ஆசைப்படுகிறாரா?  இந்த நேரத்தில் இன்னுமொன்றையும் குறிப்பிட வேண்டும் கூட்டமைப்பு எம்பியான சுமந்திரனும் அண்மையில் புலம்பெயர் நாடொன்றில் தெரிவித்த கருத்துக்களும் அண்மையில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது,ஆனால் இவரது கருத்துக்களுக்கு இன்றுவரை கூட்டமைப்பு உயர்மட்ட உறுப்பினர்களால் உரிய நடவடிக்கைகளோ அல்லது மக்களுக்கான தெளிவு படுத்தல்களோ இல்லை என்பதே கவலையான செய்தி.ஒரு எம்பி கூறியிருந்தார் "சுமந்திரனின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்தே தவிர கூட்டமைப்பின் கருத்தல்ல" அப்படியாயின் சுமந்திரன் கூட்டமைப்பு உறுப்பினர் இல்லையா?அல்லது அவரும் கூட்டமைப்புக்கு கட்டுப்படவில்லையா? எனவே இவற்றுக்கு எல்லாம் நாம் விடைகான  கூட்டமைப்பு தலைவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்போகும் கருத்துக்கள்/எடுக்கப்போகும் நடவடிக்கைகள்தான் பதில் சொல்லும்.


No comments:

Post a Comment