முல்லைத்தீவு கொக்குளாய் கருநாட்டுக்கேணிப்பகுதியில் அண்மையில் மீள்குடியேறிய இளைஞன்ஒருவன் சிறீலங்காப்படையினரால் தாக்கப்பட்டு முள்ளியவளைமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கருநாட்டுக்கேணிப்பகுதியில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்குள்ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு சென்ற சிறீலங்காப்படையினர் கூடிநின்ற மக்களை அடித்துவிரட்டியுள்ளார்கள்.குறிப்பிட்டஇளைஞனை படையினர் பிடித்துசென்று கடுமையான முறையில்தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.அதன்பின்னர் வீட்டிற்கு வந்தஇளைஞன் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் முள்ளியவளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் 22 அகவையுடைய மார்கண்டு ஜெயானந்தன் என்ற இளைஞனே படையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.கொக்குளாய் பகுதியில் பெருமளவான சிங்கள மக்கள் குடியேறியுள்ள நிலையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு பின்பு தற்போது குடியேறியுள்ள தமிழ்மக்களை அடக்கிஆளும்நிலையில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment