Sunday, August 7, 2011

முல்லை. புதுக்குடியிருப்பில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்களுடன் பெரும் புதைகுழிகள் கண்டுபிடிப்பு


பெருமளவிலான மனித எச்சங்களோடு பெரும் புதைகுழிகள் வன்னி புதுக்குடியிருப்பு பகுதியில் மீளக் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கான தற்காலிக வாழ்விடங்களை அமைக்கும் போது கண்டுபிடித்துள்ளனர்.
இதைவிட இன்னும் மனித எச்சங்கள் இருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த மனித எச்சங்கள் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட ஆக்கிரமிப்பு போரின்போது சிறீலங்கா சிங்களப் பேரினவாதப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களினுடையதாக இருக்கலாம் என்று அப்பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்களப் படைகளால் துப்பரவு செய்யப்பட்ட பகுதியாகவுள்ள, முற்றாக வெடிபொருட்கள் அகற்றப்படாத நிலையிலுள்ள, மக்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ள அந்தப் பகுதியிலேயே மனிதப் புதைகுழிகள் இனங்காணப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது-நன்றி தமிழ்வின் இணையதளம்-

1 comment: